Search This Blog

Sunday, 2 September 2012

Ninaithu Ninaithu - 7G Rainbow Colony

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும் ...

No comments:

Post a Comment