Search This Blog

Saturday, 8 September 2012

Rasaathi Unna-Vaidhaegi Kathirunthal Lyrics

ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது


கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுகொரு வண்ணக்கிளி காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
தத்தித் தவழும் தங்கச் சிமியே
பொங்கி பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நிதம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்த்தாக வேண்டும் வாவா கண்ணே


ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது


மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..
மங்கை ஒரு கங்கை என மன்னன் ஒரு கண்ணன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன..
அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவொஅ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்..


ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது
பொழுதாகி போச்சு வேலகேதியாச்சு..
பொன்மானே உன்ன தேடுது..
ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு காத்தாடி போலாடுது..
காத்தாடி
போலாடுது..

Sunday, 2 September 2012

Ninaithu Ninaithu - 7G Rainbow Colony

நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓஹ்
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒளியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே

(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும் ...